15 மணித்தியாலங்கள் 12 பாகை உறைநிலையில் வைக்கப்பட்டிருந்த இறந்த குழந்தை உயிர்த்த சம்பவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2016 (புதன்கிழமை)
இறந்தது என அறிவிக்கப்பட்டு 15 மணித்தியாலங்கள் 12 பாகை உறைநிலையில் (-12 degrees Celsius,10.4 F) சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்த குழந்தை ஒன்று, இறுதிக் கிரியைகள் இடம்பெறுவதற்கு சற்று முன்னர் உயிர்த்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சீனாவின் கிழக்கு மாகாணமான Zhejiang இல் உள்ள Pan'an என்னும் இடத்தில் உள்ள சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்த குறித்த குழந்தையின் உடலில் அசைவுகள் தென்பட்டதை கண்டுள்ள அங்கிருந்த ஊழியர்கள், குழந்தையின் தந்தைக்கு வழங்கிய தகவலையடுத்து குழந்தை அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.