வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மங்கள சமரவீரவிடம் வட மாகாணசபை உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி பாராளுமன்ற கட்டத்தில் அமைந்துள்ள அமைச்சர்களுக்கான அலுவலகத்தில் அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்தே சிவாஜிலிங்கம் குறித்த வேண்டுகோளை விடுத்திருந்தார். இதனையடுத்து நீச்சல் தடாகத்தை விரைவில் கட்டி முடிப்பதற்கு ஏற்ற வகையில் கொழும்பில் விசேட கூட்டம் ஒன்றைக் கூட்டி பணிகள் தொடர்பாக ஆராய அமைச்சர் மங்கள சமரவீர முயற்சி எடுத்துள்ளார் என்று திரு.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
குறித்த நீச்சல் தடாகத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் கடந்த வருடம் மே மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்றது.
தற்பொழுது நீச்சல் தடாகப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வந்தாலும், பணிகள் மெதுவாகவே இடம்பெற்று வருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.