பருத்தித்துறை துறைமுகத்தில் காணப்படும் புராதன தொல்லியல் ஆதாரங்களை மீட்கும் ஆய்வு நடவடிக்கைகளை தொல்லியல் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
யாழ்.பருத்தித்துறையில் உள்ள துறைமுகமானது ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மீன் பிடித்துறை அமைச்சினால் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் இத் துறைமுகமானது ஒல்லாந்தர், போத்துகேயர் காலத்திலேயே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் அதற்கு முன்னரும் அத் துறைமுகம் பயன்படுத்தப்பட்டு வந்ததாக வரலாற்று ரீதியாக கூறப்படுகின்றது. அத்துடன் அங்கு ஒல்லாந்தர் காலத்து கோட்டை ஒன்று காணப்பட்ட நிலையில் அதன் இடிபாடுகளும் காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் அக் கோட்டை இடிபாடுகளை அடையாளப்படுத்தியும், அத் துறைமுகத்தின் கீழ் உள்ள தொல்லியல் ஆதாரங்களை அடையாளப்படுத்துவதற்காகவும் தொல்லியல் திணைக்களமானது அகழ்வாராச்சிகளை ஆரம்பித்துள்ளது. இதற்காக தற்போது கடல் அடித்தள ஆய்வு பணிகளை தொல்லியல் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
நேற்றைய தினம் வரை எந்தவிதமான பொருட்களும் கண்டெடுக்கப்படாததுடன் கடல் கொந்தளிப்பு காரணமாகவும் இவ் அகழ்வு பணிகள் தாமதமடைந்துள்ளதாகவும் தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.