இன்று நள்ளிரவிலிருந்து மாகாணங்களிற்கு இடையில் போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைக்கு வருகின்றது..
கொரோனாவைரஸ் துரிதமாக பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன. 30 திகதி வரை இந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிக்கும்.
இலங்கை போக்குவரத்து சபை மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.
இதன்படி இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுக்கமைய விதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை போக்குவரத்து சபை மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.