வல்லை, வல்வையில் ஒரு மணி நேரத்தில் மூவரிடம் கொள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 09/10/2021 (சனிக்கிழமை)
வடமராட்சியின் வல்லை மற்றும் வல்வை பகுதியில் ஒரு மணி நேரத்தினுள் நேற்று முன்தினம் மாலை வேளை மூவரிடம் பணத்தை சுருட்டிக் கொண்டு தப்பித்துச் சென்ற கும்பலை காவல்துறை தேடி வருகின்றது. வெள்ளை நிறக் கார் ஒன்றினில் பயணித்த மூவர் கொண்ட இக்கும்பல் வல்லைப் பகுதியில் பயணித்த முதியவர் ஒருவரை வழிமறித்து கொரொனா தடுப்பூசி போடப்பட்டமை தொடர்பான அட்டையினை கோரியுள்ளனர். இந்த நிலையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவரிடமிருந்த பணததைப் பறித்துக் கொண்டு அக்கும்பல் தப்பித்துள்ளது.
அதே போன்று இழுவை இயந்திரத்தில் கல் ஏற்றிவந்து கொண்டிருந்த ஒருவரை வழி மறித்து பெமிட் கொரியா கும்பல் அவரிடமிருந்தும் பணத்தைப் பறித்துச் சென்றுள்ளது.
ஒரே நாளில் அதுவும் ஒரு மணி நேர இடைவெளியில் நடந்த துணிகர பணப் பறிப்பு தொடர்பில் காவல்துறை விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது.
குறித்த காரிலிருந்த ஒருவர் அங்கவீனமுற்றவர்களின் பயன்பாட்டிலுள்ள கைத்தடியை வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
மேற்கண்டவாறு நேற்றய தினக்குரலில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: October 09, 2021 at 16:52
ஆடம்பரத்துக்காக திருடுபவர்கள் அதிகமாகிவிட்டார்கள் மக்கள் விழிப்பாக அவதானமாக இருக்க வேண்டும்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.