உடுப்பிட்டியில் பெண்களை தாக்கி 47 இலட்ச ரூபா கொள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 28/06/2018 (வியாழக்கிழமை)
வடமாரட்சி உடுப்பிட்டி பகுதியில் வீட்டில் இருந்த இரு வயதான பெண்களை தாக்கி சுமார் 47 இலட்சம் ரூபாய் பணம் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளது.
மருத்துவ சத்திர சிகிச்சைக்காக இந்தியாவிற்கு எடுத்து செல்ல வைத்திருந்த பணமே கொள்ளை போயுள்ளதாக பணத்தை பறிகொடுத்தவர்கள் முறையிட்டுள்ளனர்.
அதிகாலை ஒரு மணியளவில் வீட்டின் ஓட்டைப்பிரித்து உள்ளிறங்கிய கொள்ளையர்கள், வீட்டில் இருந்த பெண்களை தாக்கி பணம் வைக்கும் அலுமாரி திறப்பினை பறித்துள்ளனர். பின்னர் அதனைத் திறந்து அதற்குள் வைக்கப்பட்டிருந்த பணத்தைக் கொள்ளையிட்டுக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.
ஆறுவருடங்களுக்கு முன்னர் காணி ஒன்றை விற்று அதில் கிடைத்த பணத்தையே இவர்கள் வீட்டில் வைத்திருந்ததாக தெரிய வருகின்றது. மருத்துவ சிகிச்சைக்கென இந்தப்பணம் வைக்கப்படிருந்ததாக பணத்தை பறிகொடுத்தவர்கள் தெரிவித்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.