வல்வெட்டித்துறை மத்தி பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த திருடர்கள் தங்களது துணிகர கைவரிசையினை காட்டி சென்றுள்ளனர். இதன் போது 35 பவுண் நகை திருடபட்டுள்ளதாக காங்கேசன்துறை உதவி பொலீஸ் அத்தியட்சகர் காரியாலய தகவல் தெரிவித்தன.
இச் சம்பவம் நேற்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் இருந்த பெண் ஒருவர் இயற்கை கடன் கழிப்பதற்கு வெளியே சென்ற நேரம் பார்த்தே இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது. எனினும் திருடப்பட்ட சம்பவம் அதிகாலையிலேயே தெரியவந்துள்ளது. நகை வைக்கப்பட்டிருந்த கைபை வெளியில் உள்ள மரத்தின் கீழ் இருப்பதைக் கண்ட பின்னரே நகை திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.
அத்துடன் வீட்டுக் காவலுக்கு வளர்க்கப்பட்ட நாயம் வாந்தி எடுத்த நிலையில் சேர்வுற்று காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு திருடப்பட்ட நகையின் பெறுமதி 24 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரினால் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது. எனினும் சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.
மேற்கண்டவாறு தினக்குரல் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.