வல்வெட்டித்துறை மதவடிப் பகுதியில் வீடு ஒன்றில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை - பருத்தித்துறை பிரதான வீதியில், மதவடிப் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலேயே இத்திருட்டு இடம்பெற்றுள்ளது.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,
குறித்த வீட்டின் உரிமையாளர்கள் வீட்டைப் பூட்டிவிட்டு அண்மையில்தலைநகர் கொழும்பு வந்துள்ளனர். நேற்று முன்தினம் பூட்ட்டிய வீட்டின் ஒரு கதவு திறக்கப்பட்டிருந்ததை அருகில் உள்ள வீட்டின் மேல் தளத்தில் இருந்து அவதானித்த சிலர், சம்பவத்தை வீட்டின் உரிமையாளருக்கு அறிவித்தனர்.
இதனையடுத்து வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு குறைந்தது வீட்டிலிருந்து அண்மையில் வாங்கப்பட்ட தொலைக் காட்சிப் பெட்டி ஒன்று திருடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் திருடர் பணம் மற்றும் நகைகளைத் திருடும் நோக்கில் வீட்டில் தேடுதல் மேற்கொண்டதற்கான தடயங்களும் தென்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் பற்றி வல்வெட்டித்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. குறித்த வீட்டிற்கு இன்று நண்பகல் வந்திருந்த போலீசார், திருடப்பட்ட பொருள் தொலைக் காட்சி என்பதால் கூடிய விரைவில் திருடர் பிடிபடலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.