அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/08/2020 (புதன்கிழமை)
கொவிட் தொற்று பரவலின் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அனைத்து அரசாங்க மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று மீள ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கு அமைவாக மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 200 இற்கு மேற்பட்டதாக இருந்த போதிலும் சுகாதார அமைச்சின் மூலம் வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடித்து மாணவர் எண்ணிக்கை வேறுபாடு மற்றும் தனிநபர் சமூக இடைவெளியை பின்பற்றி பாடசாலைகளை நடத்தமுடியுமாயின் மட்டும் போதுமான வகுப்பறை வசதி மற்றும் ஆசிரியர்கள் இருப்பார்களாயின் மாணவர்களுக்கு கல்வியை வழங்கும் நோக்குடன் இவ்வாறான பாடசாலைகளில் அனைத்து தரங்களுக்கான பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு மாகாண செயலாளர்கள் மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், அதிபர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.