யாழின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று பெட்ரோலுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதன் காரணமாக வல்வை சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வழமைக்கு மாறாக வண்டிகள் பெட்ரோல் நிரப்புவதற்காக வரிசையில் நிற்பதைக் காணலாம்.
இதேவேளை நாளாந்த எரிபொருள்விநியோகம் தொடர்பாக நுகர்வோர் அச்சம் கொள்ள தேவையில்லை என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வலையமைப்பிற்குள் 80 சதவீத பெற்றோல் தொகை இன்று மாலைக்குள் விநியோகம் செய்யப்பட்டு விடும் என அவர் குறிப்பிட்டார்.
டீசல் விநியோகம் தொடர்பாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடு கிடையாதென பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.