யாழ்ப்பாணம் நாவற்குழியில் சிவபூமி திருவாசக அரண்மனை நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தினால் நிறுவப்பட்ட சிவபூமி திருவாசக அரண்மனை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிவதட்சணாமூர்த்தி திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா நேற்று காலை சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேகக் கிரியைகளை சித்தங்கேணி வீணாகான குருபீடத்தைச் சேர்ந்த சிவஸ்ரீ சபா . வாசுதேவக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நிகழ்த்தினர். மகா கும்பாபிஷேகப் பெருவிழா நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் இடம்பெற்றது.
இலங்கையிலேயே முதன்முறையாக சிவதட்சணா மூர்த்திக்கெனத் தனியாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயம் இதுவாகும்.
சிவதட்சணா மூர்த்தியின் திருவுருவச் சிலை நான்கரை அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.