இன்புளுவென்சா AH1N1 வைரஸ் மக்கள் மத்தியில் பரவி வருவதாக தொற்று நோய் பிரிவு பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
எனவே காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுகொள்ளுமாறு பொது மக்களிடம் அவர் கோரியுள்ளார்.
மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் செல்வதனை தவிர்க்குமாறும், வெளியில் சென்று வந்தால் உடனடியாக சவர்க்காரம் பயன்படுத்தி கைகளை கழுவவேண்டும் என அவர் எச்சரித்துள்ளார். இதேவேளை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், வயோதிபர்கள், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் மிகவும் அவதானத்துடன்
செயற்பட வேண்டும் எனவும் காய்ச்சல் ஏற்படின் உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு அரச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.