இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை "நீர்நிலைகளின் விசேட சுற்றிவளைப்பு" என்ற பெயரில் புதியதொரு பிரிவை ஆரம்பித்துள்ளது.
பல்வேறு பிரதேசங்களில் நீர் நிலைகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதே இதன் நோக்கமாகும். இந்த புதிய பிரிவு 16 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளைக் கொண்டது.
மேலும் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல், கடத்தல் வியாபாரம் மற்றும் காடழிப்பு போன்ற நடவடிக்கைகளை தடுப்பதே இதன் முக்கிய நோக்கங்களில் சிலவாகும்.
இந்த புதிய பிரிவுக்கு படகுப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்கு ஐக்கிய நாடுகளின் போதைப் பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான நிறுவனம் மற்றும் இலங்கை மோட்டார் படகு சங்கத்தின் ஆதரவும் கிடைத்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.