வல்வை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கமான யோகாசன பயிற்சி வகுப்புக்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
இப்பயிற்சி வகுப்பில் முதலில் சித்திரை மாதத்தில் 25 ஆம் திகதி வரை 10 வகுப்புக்களும், அதனைத் தொடர்ந்து வைகாசி 22 முதல் ஆனி 30 வரையில் வாரத்திற்கு 3 நாட்கள் வீதம் 18 வகுப்புக்களும் நடைபெற்றன.
தற்பொழுது ஜப்பசி 2 முதல் மார்கழி 15 வரை 34 வகுப்புக்கள் நடைபெற்றுள்ளன. இது வரை மொத்த வகுப்புக்களில் 12 வயதிலிருந்து 73 வயது வரையான 54 பேர் பங்குபற்றியுள்ளனர்.
குறித்த யோகா பயிற்சி நெறியைச் சிறப்பிக்கும் வண்ணம் எதிர்வரும் தை மாதம் சென்னை யோகாகலையின் சார்பில் யோகாசனத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவரும், யோசனப்பயிற்சியில் வல்லுனருமான செல்வி ஷாலினி பாலசுப்பிரமணியம் அவர்கள் வல்வைக்கு வருகை தர இருக்கின்றார். இவர் வல்வையில் தங்கியிருந்து 10 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தை மாதம் 20 ஆம் திகதி வல்வை நகரசபை மண்டபத்தில் யோகாசன விழிப்புணர்ச்சி நிகழ்ச்சியும், யோகாசன தேர்வில் தகுதி பெற்றோருக்கு சென்னை ஆனந்த யோகா லயாவின் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
வெ.கார்த்திகேயன் (London)
Posted Date: December 19, 2017 at 15:21
நற்பணி தொட்ர்ந்தும் விரிவுபட நல்லாசிகள்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.