வடமராட்சி கடலோடிகளின் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/08/2018 (வியாழக்கிழமை)
வடமராட்சி கடலோடிகள் ஐக்கிய சமூக சேவைகள் அமைப்பின் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
படகு ஓட்டம், கட்டுமரம் வலித்தல், கடல் பந்தாட்டம், ஆண் மற்றும் பெண் பாலாருக்கான சைக்கிள் ஓட்டம்,, மரதன் ஓட்டம், பெண்களுக்கான கிளித்தட்டு, பெண்களுக்கான கூடைப்பந்தாட்டம், ஆண்களுக்கான உதைபந்தாட்டம் இதில் இடம்பெறவுள்ளன.
மேலதிக விபரங்களை பருத்தித்துறை சுப்பர் மடத்திலுள்ள வடமராட்சி கடலோடிகள் ஐக்கிய சமூக சேவைகள் அமைப்பு அலுவலகத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.