இன்று முதல் கொழும்பு காங்கேசன்துறை ஸ்ரீதேவி கடுகதி ரயில் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 05/09/2019 (வியாழக்கிழமை)
ஸ்ரீதேவி என்ற பெயரிலான நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் ஒன்று கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை ரயில் நிலையம் வரையில் சேவையில் ஈடுபடவிருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
4003 என்ற இலக்க இந்த ரயில் இன்று (5 ஆம் திகதி) காலை 3.55 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.14 மணிக்கு வவுனியா ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் வவுனியா ரயில் நிலையத்தில் இருந்து அரவியர்நகர் கிளிநொச்சி, கொடிகாமம், யாழ்ப்பாணம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிறுத்தப்படும்.
அதன் பின்னர் இந்த ரயில் இரவு 10.16 மணிக்கு காங்கேசந்துறை ரயில் நிலையத்தை சென்றடையும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதே போன்று 4004 என்ற இலக்க ரயில் நாளை (6 ஆம் திகதி) அதிகாலை 3.45 மணிக்கு காங்கேசந்துறை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வவுனியா ரயில் நிலையத்தை 5.49 மணிக்கு வந்தடையும்.
அங்கிருந்து புறப்பட்டு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயில் காங்கேசந்துறை ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் புறப்பட்டு யாழ்ப்பாணம், கொடிகாமம், கிளிநொச்சி மற்றும் அரபியர்நகர் ஆகிய ரயில் நிலையங்களிலும் நிறுத்தப்படும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
4003 மற்றும் 4004 இலக்கங்களைக் கொண்ட ரயில்கள் கொழும்பு கோட்டையில் இருந்து வவுனியா வரையில் இதுவரையில் சேவையில் ஈடுபட்டிருந்த ரயில்களே இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.