இந்திய - இலங்கை சர்வதேச கடல்சார் எல்லை தொடர்பான சந்திப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2018 (சனிக்கிழமை)
29வது சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் நடைபெற்றது.
இவ்வருடாந்த சந்திப்பு காங்கேசன்துறைக்கு அப்பாலுள்ள சர்வதேச கடல் எல்லைப் பிரேதேசத்தில் இந்திய கடற்படைக்கப்பல் சுமித்ராவில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இருநாடுகளுக்கிடையேயான நட்புறவினை பலப்படுத்துவதுடன் கடற்படை மற்றும் கடலோர காவற்படையினரின் நடவடிக்கைகளை தயார்நிலையில் வைத்துக்கொள்வதே இச்சந்திப்பின் நோக்கமாகும். மேலும், இங்கு பிராந்திய கடல் சார் பாதுகாப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை, 28வது சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு இலங்கை கடற்படை கப்பல் 'சாயுற' வில் கடந்தவருடம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.