உலகளாவிய சமாதான நாடுகளின் சுட்டெண் பட்டியலில் இலங்கை 67 வது இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2018 (சனிக்கிழமை)
2018 ஆம் ஆண்டுக்கான உலகலாவிய சமாதான சுட்டெண் பட்டியலில் 67 ஆவது இடத்தில் இலங்கை இடம் பெற்றுள்ளது.
163 நாடுகளை உள்ளடக்கிய இந்த பட்டியலில் இலங்கை 1.954 சுட்டெணுடன் இந்த நிலையை அடைந்துள்ளது.
கடந்தாண்டில் தெற்காசியாவில் மிகவும் அமைதியான நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்திலும் பிராந்தியத்தில் இத்துறையில் வெகுவாக முன்னேற்றம் கண்ட நாடாகவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கை பலம் மிக்க நன்மதிப்பை கட்டியெழுப்பியுள்ளதாக இந்த 2018ம் ஆண்டுக்கான பூகோள சமாதான சுட்டி தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தை விட 5 இடங்கள் இலங்கை முன்னேறியுள்ளது. 163 நாடுகளின் அரசியல், சமூக, பொருளாதார நிலையை அடிப்படையாகக்கொண்டு அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழுவினர் பூகோள சமாதான சுட்டியை தயாரித்துள்ளனர். இவ்வருட பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. சிரியா இறுதி இடத்தில் இடம்பெற்றுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.