உலக சமாதான சுட்டியில் இலங்கை 97 ஆவது இடம், சிரியா கடைசியில்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2016 (வெள்ளிக்கிழமை)
2016 ஆம் ஆண்டுக்கான உலக சமாதான சுட்டியில் இலங்கை 97 ஆவது இடத்தைப்இ பெற்றுள்ளது. சிட்னி மற்றும் நியூயோர்க் நகரங்களை மையமாக கொண்ட சமாதானம் மற்றும் பொருளாதாரத்திற்கான நிறுவனம் (Institute for Economics and Peace), 163 நாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த அறிக்கையை வருடாந்தம் வெளியிடுகின்றது. அவ்வகையில் சமாதானத்திற்கான தரம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு நாடும் அளவிடப்படுகின்றன.
இவற்றுள் இலங்கை நாடு இவ்வாண்டில் 2.133 என்ற சராசரிப் புள்ளியினைப் பெற்று 97 ஆவது இடத்தினைப் பிடித்துள்ளது. கடந்த வருடம் 162 நாடுகள் பங்குபற்றிய இவ் அளவீட்டில் இலங்கை 114 ஆவது இடத்தை பெற்றிருந்ததுடன் அதற்கு முன்னர் 104 ஆவது இடத்தை பெற்றிருந்தது. அதனடிப்படையில் இவ்வாண்டு இலங்கை 18 இடங்கள் முன்னேறியுள்ளது.
இவ் அளவீட்டின் மூலம் பங்குபற்றிய அனைத்து நாடுகளுக்கும் மத்தியில் இரண்டாவது அபிவிருத்தி முன்னேற்றத்தினை கொண்டுள்ள நாடாக இலங்கையை சுட்டிக் காட்டியுள்ளனர். இம்முறையும் உலகின் அமைதியான நாடாக ஐஸ்லாந்து தெரிவாகியுள்ளது. உலக சமாதான சுட்டியில் இம்முறையும் சிரியாவுக்கு இறுதியிடமே கிடைத்துள்ளது. தெற்காசிய நாடுகளில் பூட்டானுக்கு 13 ஆவது இடமும் நேபாளத்திற்கு 78 ஆவது இடமும் பங்களாதேஷுக்கு 83 ஆவது இடமும் இந்தியாவுக்கு 141 ஆவது இடமும் பாகிஸ்தானுக்கு 153 ஆவது இடமும் கிடைத்துள்ளன. சுட்டியில் ஆப்கானிஸ்தான் 160 ஆவது இடத்தில் உள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.