கடத்தப்பட்ட Aris 13 கப்பல் முன்னர் கொழும்பில் பதிவு செய்யப்பட்டிருந்தது
பிரசுரிக்கபட்ட திகதி: 16/03/2017 (வியாழக்கிழமை)
கடத்தப்பட்ட Aris 13 கப்பல் தொடர்பாக இலங்கை கடற்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சோமாலியா கடற்கொள்ளையினரால் கடத்தப்பட்ட கப்பலை விமானத்தின் மூலம் கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கூட்டு சமுத்திர செயலணி தலைமையகத்தினால் (Combined Maritime Force Headquarters) நிர்வகிக்கப்படும் கூட்டு அதிரடிப்படையினரிடம் 151 (Combined Task Force – 151) இது தொடர்பாக கடற்படை இந்த பிரிவினரிடம் கேட்போதே இந்த விடயத்தை தெரிவித்திருப்பதாக இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் நிரந்தர கடற்கொள்ளையார்களின் பிடியில் சிக்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும் இந்த படைப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படை இன்று காலை வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
ARIS-13 வர்த்தக கப்பல் (Bunkering Tanker ) எரிபொருளை எடுத்துச்செல்லுதல் என்ற இந்த கப்பல் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 8 ம் திகதி Djibouti இல் இருந்து புறப்பட்டு சோமாலியாவின் Mogadishu நோக்கி சென்றுகொண்டிருந்த போது இம்மாதம் 13ம் திகதி GMT நேரப்படி 11.58க்கு (UTC)மணியளவில் ஆயுதம்தாங்கிய இரு வள்ளங்கள் வேகமாக இந்த கப்பலை நோக்கி வந்ததாக பிரான்ஸ் சமுத்திர மீட்பு இணைப்பு மத்திய நிலையம் MRCC – France என்ற பிரிவிற்கு அறிவிக்கப்பட்டதாக இலங்கை சமுத்திர மீட்பு மத்திய (MRCC – Colombo)நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தக்கப்பல் சர்வதேச கப்பல் பதிவுநிறுவனத்தினால் Lloyds Register நிறுவனத்தில் இலங்கை கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் சமுத்திர மீட்டு இணைப்பு மத்திய நிலையம் (MRCC – France ) இந்த சந்தர்ப்பத்திலிருந்து கப்பலுடன் தகவல்களை பரிமாறல் தடைப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விடயங்களை கண்டறியும் போது இந்த கப்பல் தற்பொழுது சோமாலியா கடல் பகுதியில் நங்கூரமிடப்பட்டிருப்பதாக தெரிகின்றது.
மேலும் இந்த கப்பல் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் திகதி வரையில் இலங்கை கொடியின் கீழ் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்ததுடன் 2017 ஜனவரிமாதம் 28 ம் திகதி கொழும்பிலிருந்து Djibouti நோக்கி பயணித்துள்ளதுடன் அன்றையதினம் கப்பலில் இருந்த கொமரூஸ் (Comoros) கொடி மாற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாகவும் பாஹரேனிலுள்ள கூட்டு சமுத்திர செயலணி தலைமையகத்தினால் (Combined Maritime Force Headquarters) நிர்வகிக்கப்படும் கூட்டு அதிரடிப்படையினரிடம் 151 (Combined Task Force – 151) தகவல் கிடைத்தது என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்த கப்பல் நிரந்தர கடற்கொள்ளையர்களின் பிடியில் சிக்கியிருப்பதை உறுதிசெய்வதற்காக PC3 என்ற விமானத்தின் மூலம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கப்பலில் பணியாளர்கள் 8 பேர் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் . இந்தபட்டியலுடன் கப்பலின் கொடி கொமரூஸ் தேசியக்கொடிக்கு மாற்றப்படுவதற்கு முன்னர் இலங்கை தேசியக்கொடியுடன் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்ததாக int.wnwd.com இணையத்தளத்தின் மூலம் பெறப்பட்ட தகவல் கொழும்பு -Djibou – Mogadishu வரையில் கப்பல் பயணித்த பாதை மற்றும் கப்பல் தற்பொழுது நங்கூரமிடப்பட்டுள்ள வரைபடமும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. (News.lk)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.