15 ஆம் திகதி முதல் பொதுமக்களுக்கு இலங்கை புதிய வரைபடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/06/2018 (திங்கட்கிழமை)
கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களை உள்ளடக்கிய 1: 500 என்ற புதிய வரைபடத்தை இம்மாதம் 15ம் திகதி முதல் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வரைபடத்தை அன்றைய தினம் முதல் நில அளவையாளர் திணைக்களத்தின் நாரஹென்பிட்டியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அல்லது மாவட்ட அலுவலகங்களில் 150 ரூபாவைச் செலுத்திப் பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கையில் மண்போட்டு நிரப்பப்பட்ட பின்னர் கொழும்பு துறைமுக நகரப்பகுதி 2.6 கிலோ மீற்றர் நிலத்தைக் கொண்டதாக அமைந்துள்ளது. இது இலங்கை நிலப்பகுதியுடன் ஒன்றிணைக்கப்படும். இந்தப் புதிய நிலப்பரப்புடன் இலங்கையின் நிலப்பரப்பு 60,612.99 சதுர கிலோ மீற்றர் ஆக அமையவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.