எந்தவொரு அரச நிறுவனமும் வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியாது
பிரசுரிக்கபட்ட திகதி: 25/12/2019 (புதன்கிழமை)
எந்தவொரு அரச நிறுவனமோ அல்லது மாகாண அரச நிறுவனமோ வெளிநாடுகளுடன் எந்தவொரு உடன்படிக்கையையோ, புரிந்துணர்வு உடன் படிக்கையையோ மேற்கொள்ள முடியாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியினால் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருப்பதாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபே வர்தன தெரிவித்துள்ளார்.
வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனாக சந்திப்பின் போது அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். தற்பொழுது உள்ள விதிமுறைகளுக்கு அப்பால் செயற்படுவதற்கு இதன் மூலம் முடியாது என்றும் அவர் தெரிவித்தார். நாட்டில் ஒழுக்கத்தை எற்படுத்த அரச நிர்வாகம் சிறப்பாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சர்வதேச புரிந்துணர்வு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கருத்து தெரிவிக்கையில் அரச துறையில் ஊழலை ஒழித்து செயற்திறன் மிக்க சேவையாக தரமுயர்த்துவதற்காக புதியதொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு குறுகிய காலத்தில் அரச துறையை டியிற்றல் மயப்படுத்துவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் கூறினார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.