போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு வல்வையில் மாணவர்கள் பேரணி
பிரசுரிக்கபட்ட திகதி: 26/06/2015 (வெள்ளிக்கிழமை)
போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு வல்வெட்டிதுறையில் இன்று காலை மாணவர்களின் பேரணி ஒன்று இடம்பெற்றிருந்தது.
கொம்மாந்துறை தமிழ் கலவன் பாடசாலை, தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம், வல்வை சிதம்பரக் கல்லூரி, வல்வை சிவகுரு வித்தியாசாலை, வல்வை மகளீர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த
மாணவர்களே இந்தப் போதைப் பொருள் பாவனை எதிர்ப்புப் பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாணவர்கள் பேரணி குறித்த பாடசாலைகளில் இருந்து ஆரம்பமாகி, ஊரிக்காடு சிதம்பரக் கல்லூரி மைதானம் வரை இடம்பெற்றிருந்தது.
பேரணியில் மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு வாசகங்கள் சம்பந்தமான பதாகைகள் மற்றும் குறு நேர வீதி நாடகங்களையும் நடாத்தியிருந்தார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.