வடகிழக்கில் தொடரும் ராணுவ ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா அழுத்தம் கொடுக்க வேண்டும் - சிவாஜிலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/10/2015 (வியாழக்கிழமை)
தமிழ் பேசும் மக்கள் கடந்த 67 வருடங்களாக இலங்கையில் கடும் துன்பங்களை அனுபவித்துள்ளதாயும், இன்று பாதிக்கப் பட்டவர்கள் சர்வதேச சமூகத்திடம் நீதியையும் உரிய பாதுகாப்பு உத்தரவாதத்தையும் வேண்டி நிற்கின்றனர் எனக் கூறியதுடன், ஐ.நாவின் தீர்மானம் (OSL Report and United Nations Human Rights Council Report) தமிழ் சமூகத்திற்கு ஏமாற்றத்தை அளிப்பதாகத் தெரிவித்தார்.
இலங்கை போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை கிடைக்கச் செய்யும் பொருட்டு ஐ.நா.மன்றம் எடுத்திருக்கும் முயற்சிகளுக்கு பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதகாத் தெரிவித்த வட மாகாண சபை உறுப்பினர் திரு.M.K சிவாஜிலிங்கம், வட கிழக்கு பகுதியில் தொடரும் ராணுவ ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவர இலங்கை அரசுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க வேண்டும் என சிவாஜிலிங்கம் தனது 2 நிமிட ஆங்கில உரையில் மேலும் தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.