சிங்கபூர் நீரிணையில் கப்பல்கள் மோதல் - இருவர் பலி, இரு கப்பல்களும் தாண்டன
பிரசுரிக்கபட்ட திகதி: 14/09/2017 (வியாழக்கிழமை)
உலகின் மிகவும் நெரிசல்கள் நிறைந்த கப்பல் பாதை என அழைக்கப்படும் சிங்கபூர் நீரிணையில் (Singapore Strait) நேற்று முன்தினம் 2 கப்பல்கள் மோதி விபத்துக்கு உள்ளானதில் 2 மாலுமிகள் பலியானதுடன் 3 மாலுமிகள் காணாமல் போயுள்ளனர். அத்துடன் 2 கப்பல்களும் கவிழ்ந்து பகுதியாகத் தாண்டுள்ளன.குறித்த விபத்து சிங்கபூர் நீரிணையில் Sisters' Islands க்கு தென் மேற்காக 1.7 கடல் மைல்கல் தொலைவில் இடம்பெற்றுள்ளது.
டொமினிக்கனில் பதிவு செய்யப்பட்ட கடலை ஆழப்படுத்தும் கப்பல் (dredger) JBB De Rong 19, இந்தோனிசியாவில் பதிவு செய்யப்பட்ட எண்ணை தாங்கிக் கப்பல் Kartika Segara ஆகியனவே மோதி விபத்துக்கு உள்ளாகி, இரண்டும் கவிழ்ந்து பகுதியாகத் தாண்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.