ஒரு முன்னாள் போராளியின் இந்நாள் போராட்டம் - தழும்பு குறுந்திரைப்படம் (வீடியோ இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/08/2014 (வியாழக்கிழமை)
தமிழரின் 30 ஆண்டு கால ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் போராட்ட காலத்தில் கதாநாயகர் அந்தஸ்தில் இருந்த விடுதலை போராளிகள் இன்று முன்னாள் போராளிகள் என்ற அடைமானத்துடன் சமூகத்தில் தங்களை இணைத்து கொள்வதற்கு தாம் யாருக்காக போராடினார்களோ அவர்களுடனே போராட்டம் நடாத்தவேண்டிய ஒரு இக்கட்டான நிலையில் இருக்கின்றனர். அவ்வாறான ஒரு முன்னாள் போராளியின் இந்நாள் போராட்டத்தை மையபடுத்தியதே இந்த தழும்பு குறுந்திரைப்படமாகும்.
இக்குறுந்திரைப்படத்தை திரைக்கதையை அமைத்து இயக்கி நடித்துள்ளார் மதி.சுதா. இதற்கான திரைக்கதை நெற்கொழுதாசனின் சிறுகதை ஒன்றின் மூலத்தை அடிப்படையாக வைத்து குறுந்திரைப்படத்துக்கு ஏற்றவகையில் மாற்றப்பட்டுள்ளது. இதற்கான ஒளிப்பதிவை பாலமுரளியும், படத்தொகுப்பை மதுரனும், இசையை தர்சனனும், ஒலியமைப்பை சன்சிகனும், துணை நடிகர்களாக சி. உதயகுமார், தினேஸ், லக்ஸ்மன், குமணன், தீபன், மதுசன் ஆகியோர் நடித்துள்ளார்கள். இக் குறும்படத்துக்கான முக்கிய உதவிகளை மாதவனும், துவாரகனும் வழங்கியிருக்கிறார்கள். இது ஆய்வம் குழுமத்தின் படைப்பாக வெளியாகியுள்ளது.
இதில் முன்னாள் போராளியாக நடித்துள்ள மதி.சுதாவினை பற்றி சொல்லவே தேவையில்லை எந்தவொரு கதாபாத்திரத்தை ஏற்கிறாரோ அப்பிடியே மாறக்கூடியவர். அடுத்து ஒளிப்பதிவாளர் பாலமுரளி இன்றைய ஈழ சினிமாவில் பெயர் சொல்லக்கூடிய ஒருவராக திகழ்கிறார். தழும்பு குறும்படம் இந்த சமூகத்துக்கு நச்சென்று என்ன சொல்லுகிறதென்று கீழே பாருங்கள்
மேற்படி குறுந்திரைப்படத்தை வழங்கிய அதே குழு தமது அடுத்த படைப்பாக உம்மாண்டி என்ற முழுநீள திரைப்படத்தை வழங்கவுள்ளனர். முற்றுமுழுதாக ஈழத்தை மையப்படுத்தி இதுவரை எவரும் தொடாத பக்கத்தில் முற்போக்குதனமான திரைக்கதையை மையப்படுத்தி வெளிவரவுள்ள இவ் முழுநீள திரைப்படம் முற்றுமுழுதாக வல்வை பிரதேசத்தின் மத்தியிலேயே படமாக்கபடவுள்ளது. கதை விவாதம் முடிவுற்று படப்பிடிப்புக்கு அனுமதியும் பெற்றுள்ள நிலையில் தயாரிப்பாளருக்காக காத்துகொண்டிருக்கின்றனர்.
மேற்படி படத்தை தயாரிக்க இணைத்தயாரிப்பாளராக கனடாவில் ஸ்டார் 67 என்ற வெற்றிப் படம் ஒன்றைக் கொடுத்த இயக்குனர் கதி செல்வக்குமாரின் துணையுடன் தமது பயணத்தை ஆரம்பித்த இவர்களுக்கு இப்படத்தினை பூர்த்தி செய்ய இலங்கை ரூபாயில் 10 இலட்சம் தேவைப்படுகின்றது. மேற்படி தொகையானது இப்படத்தில் பணியாற்றும் அனைவரும் சம்பளமில்லாமல் தொண்டுமுறையில் பணியாற்றி அதற்கு மேலான தயாரிப்பு செலவுகளுக்கு மட்டுமே. எனவே இது தொடர்பில் ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து இயலுமான உதவிகளை எதிர்பாக்கிறார் இயக்குனர் மதிசுதா. மேலும் கடனாக உதவிப்பணத்தை வழங்கவிருப்பவர்களுக்கு தாங்கள் குறிப்பிடும் சட்ட ஒழுங்குகளுடன் பெறப்பட்டு திருப்பியளிக்கபடும் என்று எமக்கு இயக்குனர் மதிசுதா உறுதியளித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
rr (CA)
Posted Date: August 29, 2014 at 02:13
கசப்பாண உண்மை மனதாலும் நினைக்க முடியாதுள்ளது! போராட்டம் எமது சமூக கட்டமைப்பினுள் சிறிதளவு மாற்றத்தை ஏற்படுத்தி முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கையில் சடுதியாக தடைப்பட்டுவிட்டது! என் செய்வது போராட்டத்தின் வலியையும் வடுக்களையையும் அறியாதவர்களாக ஒரு பகுதி மக்கள் தம் வாழ்வியலை நடத்திக்கொண்டதன் விளைவு! விடுதலை அமைப்பும் இவ்வகையான சூழலை உருப்பெற வைத்தில் பங்கு உண்டென்பதையும் நாம் மறுக்க முடியாது!
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.