புதிதாக அமையப்பெற்றுள்ள யாழ் புகையிரதநிலையம் - படங்கள் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2014 (வெள்ளிக்கிழமை)
கடந்த 13ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கபட்ட யாழிற்கான புகையிரதசேவையின் மூலம் கடந்த இரு தசாப்தங்களுக்கு பின்னர் யாழ் புகையிரத நிலையம் சுறுசுறுப்பாக இயங்கத்தொடங்கியுள்ளது.
இரு தசாப்தங்களாக உள்நாட்டில் இடம்பெற்ற போரின் மூலம் வடக்கிற்கான ரயில் சேவைகள் வவுனியாவுடன் மட்டுப்படுத்தபட்டிருந்தது. பின் கடந்த 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தபின் கட்டம் கட்டமாக புகையிரத பாதைகள் அமைக்கபட்டு முதல் ஓமந்தை வரையிலும், அடுத்து கிளிநொச்சி,பளை என நீடிக்கப்பட்டிருந்த சேவைகள் தற்போது யாழ் வரை வந்துள்ளது. வருட இறுதிக்குள் காங்கேசந்துறை செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இரு தசாப்தங்களாக யாழிற்கு ரயில் சேவைகள் தடைப்பட்டிருந்தமையால் குறிப்பிட்ட அக்கால இடைவெளியில் யாழில்வாழ்ந்த தலைமுறையினர் ரயில் பயண அனுபவத்தை பெற முடியாமல் இருந்துள்ளனர். தற்போது பெருமகிழ்ச்சியுடன் தமக்கு கிடைத்த சேவையினை பயன்படுத்துகின்றனர்.
மேலும் யாழிற்கு புகையிரதத்தை இயக்குவதால் பெருமளவு வருமானம் புகையிரத திணைக்களத்திற்கு கிடைக்கின்றது. இலங்கையிலேயே அதிக வருமானமீட்டும் புகையிரத பாதை வடக்கே ஆகும். யாழ்தேவி யாழ்ப்பாணத்துக்கு இயக்கத்தொடங்கி இரண்டு நாட்களிலேயே 9 இலட்சம் வருமானம் பார்த்துள்ளது.
இலங்கை வங்கியின் நிதியுதவியில் அமைக்கபட்டுள்ள யாழ் புகையிரதநிலையமானது விஸ்தீரணமாக அமைக்கபட்டு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. தினமும் 4 ரயில் சேவைகளும், ஞாயிறு மேலதிகமாக மாத்தறை செல்லும் புகையிரதமும் இயக்கபடுகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.