சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் திருவாசக விழா நாளை 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 09.30 மணிக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெறவுள்ளது.
திருவாசக விழாவின் நிகழ்வாக நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகளின் அருளுரையைத் தொடர்ந்து, விசேட நிகழ்வாக ச. விநாயமூர்த்தி(ஒய்வு பெற்ற விரிவுரையாளர்) அவர்களின் எங்குப் புகுவேனே சிறப்புச் சொற்பொழிவும், திருவாசகப் பாடல்களுடன் கூடிய முருக நாம பஜனை நிகழ்வும், கரவெட்டி, தொண்டைமானாறு, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கலும், வறுமைக் கோட்டின் கீழ் கல்வி கற்கும் 250 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கலும் இடம்பெறவுள்ளன.
மேலும் ஸ்ரீ செல்வசந்நிதி ஆலயத்தில் நடைபெறும் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நாயன்மார்களின் திருவுருவப்படங்களும், திருவாசக ஏடுகளும் ஊர்வலமாக ஆச்சிரம மண்டபத்துக்கு திருவாசக பாராயணத்துடன் எடுத்துவரப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.