அனுமதியளிக்கப்பட்டதற்கும் அதிக எண்ணிக்கையிலான அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கியதாக தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமம் தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் மூடப்பட்டுள்ளது.
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் படி அந்தப் பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகரினால் இவ்வாறு இன்று பிற்பகல் அறிவித்தல் ஒட்டப்பட்டு சந்நிதியான் ஆச்சிரமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த பெருந்திருவிழா நாளை மறுதினம் ஆரம்பமாகிறது. சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் திருவிழாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது .
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகலு க்குப்பின் சந்நிதியான் ஆச்சிரமத்தில் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்போது கட்டுப்பாடுகளை மீறி அதிகளவான அடியவர்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டமையினால் பொது சுகாதார பரிசோதகர்களினால் ஆச்சிரமம் தனிமைப்படுத்தப்பட்டது .
இதேவேளை ஆலயச் சூழலில் அமைந்துள்ள கடைகளில் உள்ளோர் பி.சி.ஆர் பரிசோதனை எடுக்கும் வரை வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்றும் பொது சுகாதார பரிசோதகர்களால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.