தொண்டைமனாறு பிள்ளையார் கோயில் தீர்த்தோற்சவம் நேற்று நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/09/2015 (திங்கட்கிழமை)
தொண்டைமானாறு தச்ச கொல்லை சித்தி விநாயகர் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் நேற்று 27.09.2015, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இடம்பெற்றது. நேற்று காலை சுமார் 9 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து தீர்த்தோற்சவம் முற்பகல் 10 மணியளவில் கோயில் உள்வளாகத்தில் அமைந்துள்ள கோயில் தீர்த்தபெற்றது.
மகோற்சவத்தைத் தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
தொண்டைமானாறு தச்ச கொல்லை சித்தி விநாயகர் கோவில் வருடாந்த மகோற்சவம் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமாகி 10 தினங்கள் நடைபெற்று இன்று அதிகாலை கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது.
80 களின் நடுப்பகுதிவரை இந்தக் கோயிலின் தீர்த்த உற்சவம் தொண்டைமனாற்றுச் சந்தியில் அமைந்துள்ள வைரவர் கோயில் குளத்திலேயே இடம்பெற்று வந்து பின்னர் இப் பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாராண சூழல் காரணமாக கோயிலுக்குள்ளேயே இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
தச்ச கொல்லை சித்தி விநாயகர் கோவில், வல்வெட்டித்துறை - தொண்டைமானாறு வீதியில், தொண்டைமானாற்று சந்தியிலிருந்து சுமார் 1 5 0 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.