சமுத்திர சூழலின் முக்கியத்துவம் குறித்து உலக சமூகத்தை விழிப்பூட்டும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட உலக சமுத்திர தினம் 2021 (World Oceans Day 2021) இன்று கொண்டாடப்படுகின்றது.
"எங்களின் சமுத்திரங்களும், எங்களின் பொறுப்புகளும்" (Our oceans, our responsibility) எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 2009 ஜூன் 8 ஆம் தேதி செயற்பாட்டு நிகழ்ச்சி நிரலை ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ளது.
அபிவிருத்தி மற்றும் தொழில் மயமாக்கல் போன்ற மனித நடவடிக்கைகளின் தாக்கத்தால் தற்போது கடல் மாசுபாடு அதிகரித்துள்ளது என்பது சூழலியல் நிபுணர்களின் கருத்தாகும்.
பூமியின் 70 சதவிகிதம் கடலால் சூழப்பட்டுள்ளது. உயிரினங்கள் உயிர் வாழ்விற்கு நேரடியாக பங்களிக்கும் சமுத்திர சூழல் பல்வேறு மனித நடவடிக்கைகளால் மாசுபடுத்தப்படுகின்றது.
..
இதே நாளில் 1992 ஜுன் மாதத்தில் பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனீரோ (Rio de Janerio) நகரில் நடைபெற்ற "புவி மாநாட்டின் "EARTH SUMMIT" போது, சமுத்திரங்கள் மனித சமூகத்திற்கு வழங்கும் செல்வங்களை இனங்கண்டு மக்கள் மத்தியில் சமுத்திரதினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
இதன்படி 2009ம் ஆண்டு ஜுன் மாதம் 8ம் தேதியிலிருந்து உலக சமுத்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை 63/iii äஆம் தீர்மானத்தின்படி முடிவெடுத்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.