இலங்கையின் தென் பகுதி ஹிக்கடுவையில் நிர்வாணமாக நீராடிய சுற்றுலாப்பயணி ஒருவர் மீது மக்கள் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிக்கடுவை, நாரிகம பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்து கடலில் நிர்வாணமாக நீராடியதால் கைது செய்யப்பட்ட போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பிரயாணியை, காலி நீதிமன்ற நீதவான் கேசர சமரதிவாகர (Galle Magistrate Kesara Samaradivakara), 100,000 ரூபாய் சொந்தப் பிணையில் செல்ல இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.
பொலிசாரின் விசாரனையின் போது தான், குளிக்கும் இடத்திற்கு துணியைக் கொண்டு வர மறந்ததாக குறித்த சுற்றுலாப்பயணி தெரிவித்துள்ளார். (Dailymirror)
ஹிக்கடுவையில் நிர்வாணமாக நீராடிய சுற்றுலாப் பயணி கைது, துணியைக் கொண்டுவர மறந்ததாக தெரிவிப்பு! Nude tourist arrested http://t.co/6A9LTOHpiU
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.