காலியிலிருந்து சுமார் 30 கடல் மைல்ககள் தொலைவில் மீன்பிடி ரோலர் ஒன்று கவிழ்ந்தத்தில் நான்கு மீனவர்கள் பலியாகியுள்ளனர். இருவரைக் காணவில்லை. நேற்று (12) வர்த்தகக் கப்பல் ஒன்று Maritime Rescue Coordinating Centre (MRCC) எனப்படும் கடலில் ஆப்பத்தில் உள்ளவர்களைக் காப்பாற்ற அமைக்கப்பட்டுள்ள நிலையம் ஒன்றுக்கு வழங்கிய தகவைலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த இலங்கை கடற்படைப் படகு ஒன்று நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரைக் காப்பாற்றியுள்ளது.
காப்பற்றப்பட்ட மீனவர் வழங்கிய தகவலையடுத்து தொடர்ந்து தேடுதல் மேற்கொண்ட கடற்படையினர் நான்கு மீனவர்களின் சடலங்களை மீட்டுள்ளனர். மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.