இலங்கையை சுனாமிப் பேரலை தாக்கி இன்றுடன் 16 வருடங்கள் நிறைவடைகின்றன.
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி இந்தப் பேரவலம் நிகழ்ந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேய ஒருங்கிணைப்பு அலுவலக அறிக்கைகளின் பிரகாரம், இலங்கையின் 13 கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் ஆகக்கூடுதலாக 10 ஆயிரத்து 436ற்கு மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்தன. இலங்கையில் நிகழ்ந்த மொத்த மரணங்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 322 என சர்வதேச சுனாமி தகவல் நிலையம் அறிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுக்கு அப்பாலுள்ள கடலில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சுனாமி பேரலை எழுந்து இந்துமா சமுத்திரத்தின் 13 கரையோர நாடுகளைத் தாக்கியது. இந்த இயற்கை அனர்த்தத்தில் மொத்தமாக 2 இலட்சத்து 28 ஆயிரம் பேர் வரை மரணித்தார்கள். இந்தோனேசியாவில் 67 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும், இந்தியாவில் 16 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் மரணத்தைத் தழுவினார்கள்.
ஆழிப் பேரலை அனர்த்தத்தால் இந்துமா சமுத்திர கரையோர நாடுகளுக்கு ஏற்பட்ட பொருளாதார நஷ்டம் ஆயிரம் கோடி டொலரைத் தாண்டுகிறது. இலங்கையில் சுனாமியின் விளைவாக பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை மாவட்டங்களில் கூடுதல் பாதிப்புக்கள் ஏற்பட்டன. சர்வதேச அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்திருந்தன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.