சுயல் கால்வாய்யில் தரைதட்டியிருந்த 'Ever Given' கப்பல் மீட்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2021 (திங்கட்கிழமை)
சூயஸ் கால்வாயில் கடந்த 6 நாட்களாக தரை தட்டியிருந்த உலகின் அதி பாரிய கொள்கலன்கலன் கப்பல்களில் (Ultra Large Container Vessel) ஒன்றான MV Ever Given கப்பல் சற்று முன்னர் மீட்க்கப்பட்டுள்ளது.
மீட்பு குழுவினரால் இதை மீட்க்க முடிந்ததாக கப்பல் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று குறிப்பிட்டுள்ளது.
ஆசியா - ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா நாடு.களுக்கு இடையிலான கப்பல் போக்கு வரத்து இதனால் தடைப்பட்டிருந்ததால் உலகின் கவனத்தை இந்த விடயம் பெரிதும் ஈர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
20,388 TEU (Twenty equivalent unit) கொள்ளளவு கொண்ட இந்தக் கப்பல், இன்று திங்கட் கிழமை காலை வெற்றி கரமாக மீட்கப்பட்டதாக குறித்த கப்பலின் எகிப்திய முகவர் ‘Inchcape Shipping Services’ அறிவித்துள்ளனர்.
குறித்த மீட்பு பணியில் 15 இழுவைக் படகுகள் (Tug boats) பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கப்பல் மீட்கப்பட்டதையடுத்து இன்று மாலை சுயல் கால்வாய் வழி கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது என சுயல் கால்வாய் அதிகாரசபை (SCA) அறிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
NAGULASIGAMANY NADANASIGAMANY (Canada)
Posted Date: March 29, 2021 at 21:03
நான் கப்பலில் வேலை செய்தபோது 4.5 தடவை சுயஸ் கால்வாய் வழியாக செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்த MV Ever Given கப்பல் மீண்டும் மிதக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்த எனக்கு கப்பல் நகர்ந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.