உலகின் முதன் முறையாக அவுஸ்ரேலியாவில் கடலில் சிக்கிய வாலிபர்களை ஆளில்லாத விமானம் காப்பாற்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியா கடலில் வீழ்ந்தவர்களை காப்பாற்றுவதற்காக ட்ரோன் எனப்படும் ஆளில்லாத விமானங்களை பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நியு சவுத் வேல்ஸ் கடலில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தத போது இரண்டு வாலிபர்களை அலை இழுத்து சென்றது. அவர்கள் உயிருக்காக போராடிக்கொண்டிருந்தனர்.
இதனைக் கண்ட பாதுகாப்பு வீரர்கள் ட்ரோனை அந்த இடத்திற்கு அனுப்பிவைத்தார். அவர்கள் இருக்கும் இடத்தை சரியாக கண்டுபிடித்த ட்ரோன் உயிர்காக்கும் இறப்பர் பலூன்களை கீழே போட்டது. அதனை பிடித்துக் கொண்டு இருவரும் கரை வந்து சேர்ந்தனர். உலகில் முதன்முறையாக கடலில் சிக்கியவர்களை ட்ரோன் காப்பற்றியது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்த ட்ரோன்கள் கழலில் சுறா திமிங்கிலங்கள் போன்ற பெரிய மீன்கள் வருவதைக் கண்டுபிடித்து எச்சரிக்கை செய்யும் அவுஸ்ரேலியாவின் சில கடற்கரைகளில் சுறாக்களை தடுக்க வலை அமைக்கப்பட்டிருக்கும் ஆனால் இது மற்ற கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த ட்ரோன் முறை மிகவும் சிறந்தது என கூறப்படுகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.