வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்கு உட்பட்ட கடற்றொழிலாளர்கள் கடலட்டை பிடிப்பு, டைனமெற், சுருக்குவலை, உழவு இயந்திர பாவனை, அதிக ஒளி பாய்ச்சி மீன் பிடித்தல் ஆகியவற்றை நிறுத்துமாறு கோரி நேற்றிலிருந்து எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 6:30 மணி வரை போராட்டம் ஒன்றினை நடத்திவருகின்றனர்.
அண்மைக் காலமாக வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் சட்ட விரோத தொழில்களான சுருக்கு வலை, டைனமெற், ஒளி பாய்ச்சி மீன்பிடித்தல் ஆகியவற்றுடன் தமது பகுதியில் தங்கியிருந்து பிரதேச மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் மீன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் வகையில் கடலட்டை பிடித்தல் போன்ற பல்வேறு சட்ட விரோத தொழில்களில் பிற மாவட்ட மீனவர்கள் ஈடுபடுவது நிறுத்தக் கோரியே இப்போராட்டத்தில் ஈடுபடுவதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சமாசம், அதன் கீழுள்ள சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.