யாழ்ப்பாணம் புலோலியை பிறப்பிடமாகவும் உடுப்பிட்டி, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட வங்கியாளர் திரு.வ.சிவச்சந்திரதேவன் அவர்கள் இன்று (23.05.2020) காலமானார்.
வடமராட்சி சுருக்கெழுத்து கழகத்தின் நிறுவனரான இவர் 1985 களில் அதனை உருவாக்கி உடுப்பிட்டி மற்றும் சூழவுள்ள பிரதேசங்களில் உள்ள இளையோர்களுக்கு தட்டச்சினை தொழில்முறையாக சொல்லிக் கொடுத்து அதன் மூலம் பலர் இன்று நீதிமன்றங்களிலும், வங்கிகளிலும், கச்சேரிகளிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் தொழில் பெற்று நல்வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
பண்டகைப்பிள்ளையார் ஆலயத்திற்கு பல்வேறு உதவிகளையும் வழங்கி சமயப் பணிகளிலும் உதவிகள் புரிந்து வந்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Mrs R. Jeevakan (France)
Posted Date: June 01, 2020 at 21:23
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
என்னைப் போன்ற பலர் அவரிடம் எமது ஊரிலேயே தமிழ் சுருக்கெழுத்து தட்டச்சுப் பயிற்சி, ஆங்கில சுருக்கெழுத்து தட்டச்சு கல்வியை சேவையாக எமக்கு பயிற்றுவித்தவர். அதன் மூலம் அரசாங்க அமைச்சுகளில் நாம் வேலைவாய்ப்பு பெற்று எம்மை வாழ்க்கையில் உயர்வித்த எங்கள் ஆசிரியருக்கு எமது சிரம் தாழ்த்தி அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.