சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையினால் நடத்தப்படும் வைகாசி பெருவிழா எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலை 9 மணிக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தில் நடைபெறவுள்ளது.
இவ் விழா விரிவுரையாளர் அ.குமாரவேல் தலைமையில் இடம்பெறவுள்ளதுடன் ஆசியுரையை நல்லை ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளும், வாழ்த்துரையை பேரவையின் போஷகர்கள் சிவ ஸ்ரீ தண்டபாணிக தேசிகர் மற்றும் பிரம்மஸ்ரீ ப.மனோகர குருக்கள் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
இவ் வைகாசிப் பெருவிழாவில் இளைப்பாறிய அதிபர் ஆறுமுகம் சிவநாதன், சந்நிதியான் ஆச்சிரம சுவாமிகள் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகளால் விருது விழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளதுடன் வித்தகச் செழுமை நூல் வெளியிட்டு மற்றும் ஒட்டிசுட்டான் சம்மளந்துளாய் அறநெறி பாடசாலை மாணவர்களில் கலை நிகழ்வுகள் என்பன இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.