புது மாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து தொடர் அறிமுக விழாக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/05/2015 (வெள்ளிக்கிழமை)
வல்வையின் எழுத்தாளர் கி. செல்லத்துரையின் புது மாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து என்னும் நூல் தொடர்ந்து தமிழகம் எங்கும் பயணிக்கிறது. புது மாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து நூலில் 2 ஆம் பாகம் வெளியாகியிருக்கிறது, இந்த நூலுக்கான இரண்டாவது பதிப்பின் திறனாய்வு கூட்டங்கள் தமிழகத்தின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றன.
இன்று சேலத்திலும், நாளை திருப்பூரிலும் நடைபெறவுள்ளன, அதைத் தொடர்ந்து திருச்சி, விருதுநகர் என்று பல இடங்களிலும் தொடர்ச்சியாக நடைபெறவிருக்கிறது.
இதன் சிறப்பம்சமாக எதிர்வரும் செப்டெம்பர் மியன்மாரிலும் (பர்மா), பின் மலேசியாவிலும் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் தற்பொழுது செய்யப்பட்டுவருகின்றன.
தமிழகத்தில் உள்ள தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் தமிழின மறுமலர்ச்சிக்கான சிறந்த நூல் என்று இந்நூலை தேர்வு செய்து தமிழகம் முழுவதும் கிராமங்கள் தோறும் அறிமுகம் செய்து விழிப்புணர்ச்சியூட்ட முடிவு செய்துள்ளது.
போரினாலும், ஒடுக்குமுறையாலும் பாதிக்கப்பட்ட தமிழினம் தனது வரலாற்றையும், பெருமையையும் அறிந்து தலை நிமிர வழிகாட்டும் தன்னம்பிக்கை நூல் இதுவாகும்.
கடலடியில் புதைந்து கிடக்கும் பூம்புகார் நகரின் புகைப்படத்தை அட்டைப்படமாக வைத்து வெளியாகியுள்ளது இந்த நூல்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.