வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7 ஆவது மாபெரும் கலை இலக்கிய விழா நேற்று முன்தினம் 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதுவருடத்தினத்தன்று இடம்பெற்றது. இந்த விழாவின் இறுதி நிகழ்வாக வல்வை ஹெலியன்ஸ் நண்பர்களின் 45 ஆவது தயாரிப்பான "ஆசைகளே!!! ஓ..... ஆசைகளே!!!!" என்ற நாடகம் மேடை ஏற்றப்பட்டிருந்தது.
சுமார் 48 நிமிடங்கள் நீடித்திருந்த இந்த நாடகத்தை எழுதி இயக்கியவர் ஹெலியன்ஸ் நாடகக் குழுவைச் சேர்ந்த நாடகக் கலைஞர் கலாபூஷணம் வெ.முத்துசாமி அவர்கள் ஆவார். இவரே நாடகத்திற்கான ஒப்பனையையும் மேற்கொண்டிருந்தார்.
நிகழ்கால வாழ்வின் ஒரு பகுதியைச் சித்தரிக்கும் வகையில் அமையபெற்ற இந்த நாடகம், வெளி நாடு ஒன்றிற்கு மகனை கடன் பட்டு அனுப்பிவிட்டு,, ஆடம்பர வாழ்வில் ஈடுபாடும் குடும்பங்களை மையப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
நாடகத்தின் கதா பாத்திரங்களாக கடன் பட்டு மகனை வெளி நாட்டுக்கு அனுப்பும் பெற்றோர், மகன், அறிவுரை கூறும் குடும்பம், மற்றும் வெளிநாட்டில் மகனுடன் உள்ள நண்பர்கள் என வெளிப்படுத்தப்பட்டிருந்தனர்.
வெளிநாடுகளில் வாழும் நம்மவர்கள் இன, மொழி, மத வேறுபாடுகள் இன்றி வாழ்வதைக் குறிக்கும் வகையில் இஸ்லாமியர் ஒருவரின் கதாபாத்திரம் ஒன்றும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
நாடகத்தின் சிறப்பம்சமாக, நாடகத்தின் கருப்பொருளை இலகுவாக பார்வையாளருக்கு வெளிக்கொணரும் வகையில் 2 உரைஞர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர். 2 உரைஞர்களாக பங்கேற்றிருந்தவர்கள் விநோலினா, விக்டோரியா எனும் 2 பெண்மணிகள் என்பதும் சிறப்புடன் குறிப்பிடத்தக்கது.
நாடகத்தில் பங்கேற்று இருந்தவர்கள் Capt.பாஸ்கரன், அப்பர், மகேந்திரன், ரகு, தர்சன், ரகுநாதன், சதா, சாஞ்ஜேவேல் ஆகியோர் ஆவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.