கப்பலுடையவர் ஆலயத்தில் இன்று நடைபெற்ற பூங்காவனத்திருவிழா (படங்கள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 23/07/2014 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை மதவடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இன்று பூங்காவனத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இன்று பிற்பகல் 01.00 மணியளவில் வசந்தமண்டப பூசையுடன் ஆரம்பமான திருவிழா பிற்பகல் 03.30 மணியுடன் பிள்ளையார் வீதி உலாவுடன் நிறைவு பெற்றது.
சுவாமி வீதி உலாவின் பின்னர் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டிருந்தது. கப்பலுடையவர் ஆலயத்தில் வரும் சனிக்கிழமை அன்று தீர்த்தத்திருவிழாவுடன் நிறைவு பெறவுள்ளது.
பூங்காவனத் திருவிழாவின் போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.