பட்டப் போட்டி திருவிழா 2019 - பிரமாண்டமாக்கிய அதிகளவிலான பட்டங்கள் (படங்களின் தொகுப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2019 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம், வல்வை உதயசூரியன் கழகம் இணைந்து நடத்தும் வினோத விசித்திர பட்டப் போட்டி திருவிழா 9 வது வருடமாக வெகு விமர்சியாக உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் கொண்டாடப்பட்டது.
பட்டப் போட்டி திருவிழாவின் நாயகர்களான பட்டக் கலைஞர்கள் தமது கற்பனைத்திறனையும் கைவண்ணத்தையும் ஒருசேர முப்பரிமான வினோத பட்டங்களை வானில் பறக்கவிட்டு மக்களை மகிழ்வூட்டினர்.
இதன் போது கடந்த ஆண்டுகளை விட இவ் வருடம் 9 வது வல்வெட்டித்துறை பட்டப் போட்டி திருவிழாவில் அதிகளவான பட்டக் கலைஞர்கள் பட்டப் போட்டியில் பங்கெடுத்து, 84 முப்பரிமான விசித்திர பட்டங்களை வல்வையின் வானில் பறக்கவிட்டிருந்தனர்.
இவற்றில் போட்டி விதிமுறைக்கமைய கடந்த பட்டப் போட்டி திருவிழாக்களில் பங்குபெறாத, புதிய கற்பனையுடன் அனைத்துப் பட்டங்களும் பங்கெடுத்திருந்தது எமது ஊர் பட்டக் கலைஞர்களின் கற்பனை திறனை வெளிக்காட்டி நிற்கிறது.
84 முப்பரிமான பட்டங்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரேயொரு பட்டக் கலைஞரின் பட்டத்தை தவிர அனைத்து பட்டங்களும் எமது வல்வெட்டித்துறை பட்டக் கலைஞர்களினுடையது என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிறப்பம்சமாகும்.
வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம், வல்வை உதயசூரியன் கழகம் இணைந்து நடத்தும்; வல்வெட்டித்துறை பட்டப் போட்டி திருவிழாவின் மூலம் தமிழர்களின் பட்டம் கட்டும் கலையும், எமது இளைஞர்களின் கற்பனைத்திறனும் உள்நாடு தாண்டியும் வெளிநாடுகளையும் சென்றடையும் என்பதில் ஐயமில்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.