நெடியகாடு Jaffna Challengers Cup – விறுவிறுப்பான அரை இறுதி ஆட்டங்களின் பின் யங்கம்பன்ஸ், சென் அன்டனிஸ் இறுதியில்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/03/2015 (வியாழக்கிழமை)
நெடியகாடு Jaffna Challengers Cup – விறுவிறுப்பான அரை இறுதி ஆட்டங்களின் பின் யங்கம்பன்ஸ், சென் அன்டனிஸ் இறுதியில்
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் இதுவரை நடாத்தி வந்த Jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று (25.03.2015) நெடியக்காட்டு மைதானத்தில் நடைபெற்றன.
முதலாவது அரையிறுதி போட்டியில் நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம் மோதியது. மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் எதுவித கோல்களையும் பெற்றிருக்கவில்லை.
இதனால் தண்ட உதை வழங்கப்பட, தண்ட உடையில் 7:6 என்ற கோல்கணக்கில் யங்கம்பன்ஸ் வெற்றிபெற்றது.
இரண்டாவது அரையிறுதி போட்டியில் நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து பாசையூர் சென் அன்டனிஸ் விளையாட்டுக் கழகம் மோதியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் 2 அணிகளும் சம பலத்துடன் மோதியிருந்தாலும், ஆட்டத்தின் பிற்பாதியில் சிறப்பாக ஆடிய சென் அன்டனிஸ் அணி 2, 13, 20 மற்றும் 24 ஆவது 4 கோல்களை பெற்று 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாக்கியுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.