மன்னர் கில்லரி வல்வையை வெற்றி, இன்று ஆதிசக்தி மோதுகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/01/2017 (சனிக்கிழமை)
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் "Northern Challenger cup-2016" உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இரண்டாம் சுற்றின் இரண்டாம் நாள் ஆட்டங்கள் நேற்று (06-01-2017) நடைபெற்றது.
இரண்டாவது போட்டியில் போட்டியில் மன்னார் கில்லரி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை அணி மோதியது.
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் கில்லரி அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றது.
போட்டிகள் வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் பிற்பகல் 4 மணிக்கு இடம்பெற்றன.
வடக்கின் மிகச் சிறந்த அணியாக விளங்கிவரும் மன்னார் கில்லரி அணி கடந்த 2015 ஆம் ஆண்டு கழுகுகள் விளையாட்டுக் கழகம் நடாத்திய வடமாகாண வல்லவன் என்னும் பெரும் தொடரில் 2 ஆம் இடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெறவுள்ள போட்டியில் மன்னர் ஜோசெப் வாஸ நகர் ஐக்கிய விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை ஆதிசக்தி மோதுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.