வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழகத்தின் 75 ஆவது பவள விழாவை முன்னிட்டு விளையாட்டுப்போட்டிகள் இன்று ஆரம்பமாகின. ஆரம்ப நிகழ்வு வேவில் திருச்சிற்றம்பல பிள்ளையார் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டது.
முதலாவது விளையாட்டு நிகழ்வாக வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாகின. அன்று நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் இளங்கதிர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதியது.
இந்த ஆட்டத்தில் 1:0 என்ற கோல் கணக்கில் தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது இப்போட்டியின் ஆட்டநாயகனாக தீருவில் விளையாட்டுக்கழக வீரர் மயூரன் தெரிவு செய்யப்பட்டார்.
தொடர்ந்து போட்டிகள் தற்பொழுது நடைபெற்றுவருகின்றன.
அன்றைய சிறப்பு நிகழ்வாக மைதானத்தில் ரெயின்போ விளையாட்டுக்கழக தலைவரினால் மரக்கன்று ஒன்று நாட்டப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.