வல்வை விளையாட்டுக்கழக மாலுமிகள் நடத்திய வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான 10 ஓவர்கள், 11 நபர்கள் கொண்ட மென்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி நேற்று றெஜின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் நேதாஜி, றெயின்போ அணிகள் மோதிக் கொண்டன.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஆடிய றெஜின்போ அணி 10 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 73 ஓட்டங்களை பெற்றது. அதிகபட்சமாக றெஜின்போ அணி சார்பாக ருதேஷா 22 (15), ஜெகன் 17 (16), பிரணவன் 10 (9) ஓட்டங்களை பெற்றனர்..
74 எனும் வெற்றியிலக்கை நோக்கி ஆடிய நேதாஜி அணி 9.2 பந்துப்பரிமாற்றத்தில் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது 54 ஓட்டங்களை மட்டும் பெற்றது . இதன் மூலம் 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் றெஜின்போ வெற்றி பெற்று சம்பியனாகியது.
பந்து வீச்சில் ருதேசா, ஜெகன், பிரணவன், கபிலன் ஆகியோர் 2 இலக்குகளையும் மணி கானகச்செல்வன் தலா 1 இலக்கினை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
ஆட்டநாயகனாக ருதேஷா தெரிவு செய்யப்பட்டார் [ 22 (15) +2 இலக்குகள்].
தொடராட்டநாயகனாக பிரணவன் தெரிவு செய்யப்பட்டார்.....
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.