வல்வை பிரித்தானியா நலன்புரிச் சங்கத்தின் பல செயற்பாடுகளில் ஒன்றான வாழ்வாதார கொடுப்பனவு இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
விநாயகபுரம் கிளிநொச்சில் வசிக்கும் குமாரவடிவேல் செல்வகலா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுபற்றி வல்வை பிரித்தானியா நலன்புரிச் சங்கம் தெரிவித்துள்ளதாவது.
எமது ஊருக்காக பன்னிரண்டு வருடங்கள் சேவையாற்றியுள்ளார். தற்பொழுது வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருவதாலும் இவரின் மகளின் கல்வி வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்காகவும் வறுமைக் கோட்டின் கீழ் இருந்து மீண்டு வருமானத்தைப் பெறுவதற்காக ஒரு லட்சத்தி பத்தாயிரம் ரூபா பெறுமதியான 12லீற்றர் பால் கறக்க கூடிய பசுவும் கன்றும் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை வல்வை மக்களின் பிரித்தானியா நலன்புரிச் சங்கம் முழுமையான ஏற்பாடுகளை செய்திருந்தது அதனை வல்வெட்டித்துறை இளைஞர்கள் வழங்கி வைத்து கௌரவித்தார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.