வல்வை Ever Tree நிறுவனத்திற்கு "GMP" தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா 20 ஆகஸ்ட் 2019 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் குறுகிய காலத்தில் இந்த தர சான்றிதழை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு வருடமாக, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து யாழ்ப்பாண கூட்டு வர்த்தக மற்றும் கைத்தொழிலாளர் சம்மேளனத்தின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை மூலம் EverTree நிறுவனம் உணவு கையாளுதல் செயல்முறை (சுகாதார நடைமுறைகள்), தரமான மூலப்பொருட்கள், சேமிப்புமுறை, தொழிற்சாலை கட்டிடம், இயந்திர சாதனங்கள், விற்பனை மற்றும் விநியோக முறைகள் மற்றும் ஆவணங்கள் (பட்டியல்கள் மற்றும் வழக்கமான பரிசோதனைகள்) ஆகியவற்றில் சிறந்த மாற்றத்தை கொண்டுவந்து இந்த தர சான்றிதழ்காக விண்ணப்பம் செய்யப்பட்டது.
“GMP” தர சான்றிதழ் ஆனது உணவு தயாரிப்பு மற்றும் பொதிசெய்யும் பொருட்கள் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் முறையில் ஆவணங்களுடன் கையாளப்படுகின்றதையும் மற்றும் அந்த உணவு பொருட்கள் பொருத்தமான உணவு செயல்முறை சூழலில் உற்பத்திசெய்யபடுகின்றது என்பதையும் உறுதிபடுத்தும்.
இந்த தர சான்றிதழ் நிறுவனத்திற்கு நற்பெயரையும், தயாரிப்புகளை ஏனைய மாவட்டங்களுக்கும் மற்றும் சர்வதேச சந்தைகளுக்கும் சந்தைப்படுத்துவதற்கும் அதிக வாய்ப்புகளை வழங்கும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.