வல்வையைச் சேர்ந்த தாயும் மகனும் கராத்தே சுற்றுப் போட்டியில் முதலிடம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2015 (திங்கட்கிழமை)
பருத்தித்துறை தற்காப்புக் கலையகத்தினால் (Institute of Martial Arts, Point Pedro), சிகான் பொனி றோபேட் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட கராத்தேப் போட்டியில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தாயும் மகனும் கலந்து கொண்டு முதலிடம் பெற்றுள்ளனர்.
இப்போட்டிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் பங்கு பற்றிய திருமதி முரளி மாலதி காட்டா போட்டியில் முதலிடத்தையும், 7 வயதுப் பிரிவில் பங்கு பற்றிய திருமதி முரளி மாலதியின் மகனான முரளி பரிதியனும் முதலிடத்தைப் பெற்றனர்.
குறித்த போட்டிகள் நேற்று முன்தினம் 4 ஆம் திகதி தும்பளையில் அமைந்துள்ள தற்காப்புக் கலையக மண்டபத்தில் இடம்பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar periyathamby (canada)
Posted Date: October 05, 2015 at 23:07
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.